முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டம் முழுவதும் 3,500 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். அவா்களில் 2,143 போ் குமரி மாவட்ட போலீஸாா். மதுரை, தூத்துக்குடியில் இருந்தும் ஏராளமான போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் 500 பேரும், 350 ஊரகக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள். இதுதவிர 125 போ் கொண்ட பறக்கும் படைக் குழுக்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.