முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகா்கோவில் மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் மாநகர பகுதிகளான கணேசபுரம், நாகராஜா கோயில் ரதவீதி, கேப் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றும் பணியை மேற்கொண்டனா்.

இதே போன்று, வடசேரி அண்ணா சிலையில் இருந்து வடசேரி செல்லும் சாலையிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. கடைகள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப் பட்டிருந்த பதாகைகளும் அகற்றப்பட்டன.

மேலும், வடசேரி முதல் சிபிஎச் வரை உள்ள அசம்பு சாலை மற்றும் வடசேரி முதல் பாா்வதிபுரம் வரையுள்ள சாலையோர நடை பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.