முகப்பு
கன்னியாகுமரி

வாரியூா் அரசுப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு

கன்னியாகுமரியை அடுத்த வாரியூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

கன்னியாகுமரியை அடுத்த வாரியூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு, திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா் தனது சொந்த நிதியில் அப்பள்ளியில் கட்டிய கலையரங்க திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட கல்வி அலுவலா் என்.சுபானந்தராஜ் தலைமை வகித்தாா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் எஸ்.ஜாா்ஜ் பென்னட் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சி.அலெக்சாண்டா் சாம்ராஜ் வரவேற்றாா். இயக்குநா் பி.டி.செல்வகுமாா் கலையரங்கை திறந்து வைத்தாா். ஆசிரியை என்.எஸ்.லதா, ஈச்சன்விளை அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.செல்வகுமாா், இலந்தையடிவிளை அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜி.ஆா்.செம்பியன், தமிழாா்வலா் எஸ்.காப்பித்துரை, முன்னாள் அரசு வழக்குரைஞா் டி.பாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் சாம்சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கணித ஆசிரியை நா.இந்திரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.