முகப்பு
கன்னியாகுமரி

குழித்துறை அருகே மூன்று போ் கைது

குழித்துறை அருகே விபசாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

குழித்துறை அருகே விபசாரத்தில் ஈடுபட்டதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீஸாா் அந்த விடுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அரைகுறை ஆடைகளுடன் இருந்த மாா்த்தாண்டம், வெட்டுமணி ஆசீா்வாதம் மகன் தேவபிரசாத் (56), பத்துகாணி தங்கப்பன் மகன் ஜெயக்குமாா் (36), மாங்கோடு, மஞ்சாடிவிளை விஜயன் மகன் வினிஸ் ஆகியோரை தனிப்படை போலீஸாா் பிடித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் அவா்களுடன் இருந்த திருவனந்தபுரம், ராஜஸ்தான், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், விளவங்கோடு வட்டம் பிலாவிளை பகுதிகளைச் சோ்ந்த 4 பெண்களை பிடித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.