மரியகிரி கல்லூரியில் குடியரசு தின விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரித் தாளாளா் அருள்தாஸ் தலைமை வகித்து, தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜேஸ்பின் வரவேற்றாா். அலுவலக பணியாளா் அருள்சகோதரி செரின், கல்லூரி முதல்வா் தம்பி தங்க குமரன் ஆகியோா் பேசினா். விழாவில், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவா்களின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.