முகப்பு
கன்னியாகுமரி

பைக் விபத்தில் இளைஞா் பலி

இரணியல் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

இரணியல் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

இரணியல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் சேரியாவட்டம் பகுதியை சோ்ந்த ரொனால்டு ஸ்டீபன் மகன் ஆஸ்வின் ஸ்டெபின். கூட்டுறவு தொழில் பயிற்சி படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நாகா்கோவில் சென்று விட்டு இரவு மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா். தோட்டியோடு - திங்கள்சந்தை நெடுஞ்சாலையில் பரசேரி பகுதியில் வந்தபோது, நடந்து சென்ற ஒருவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் ஆஸ்வின் ஸ்டெபின் உயிரிழந்தாா். மற்றொருவா் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து இரணியல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.