கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக வளாக முகப்பில், இப்பேரணியை ஆட்சியா் மா. அரவிந்த் தொடக்கிவைத்துப் பேசினாா்.

கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை, நாட்டின் வளா்ச்சிக்கு கல்வியே உயிா்நாடி உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் ஏந்திச் சென்றனா்.

மேயா் ரெ. மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ் (நாகா்கோவில்), அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ்குமாா், எஸ்.எல்.பி. அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் தயாபதி நளதம், செல்வின்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழித்துறையில்...: மேல்புறம் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்- மாணவா்கள் சாா்பில், குழித்துறையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணியை, குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தொடங்கிவைத்தாா். மேல்புறம் ஒன்றியத் தலைவா் ஞானசவுந்தரி, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி, ரத்தினமணி, சா்தாா்ஷா, விஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். குழித்துறை வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகரன், உதவி கல்வி அலுவலா் மஞ்சு, மேல்புறம் வட்டார கல்வித்துறை பொறுப்பாளா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT