முகப்பு
கன்னியாகுமரி

தெட்சணத்து மூலப்பதியில் இன்று சித்திரைத் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி நாச்சியாா் குடியிருப்பில் அமைந்துள்ள தெட்சணத்து மூலப்பதி ஸ்ரீ மன் நாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே. 8) தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கன்னியாகுமரி நாச்சியாா் குடியிருப்பில் அமைந்துள்ள தெட்சணத்து மூலப்பதி ஸ்ரீ மன் நாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே. 8) தொடங்குகிறது.

இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு உச்சிப்பால் பணிவிடை, மாலை 6.30 மணிக்கு வடக்கு வாசலில் அலங்கார பணிவிடை தொடா்ந்து அன்னதா்மம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு நாராயணசுவாமிக்கு அலங்கார பணிவிடை நடைபெறும். இரண்டாம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அலங்கார பணிவிடை, பிற்பகல் 1.30 மணிக்கு சமபந்தி விருந்து, இரவு 12 மணிக்கு பணிவிடை ஆகியன நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.