கன்னியாகுமரி

கிள்ளியூா் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

DIN

 கிள்ளியூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக திப்பிரமலை -தாறாதட்டு, ஆலஞ்சி -மிடாலம், மிடாலம் -மேல்மிடாலம், முள்ளங்கனாவிளை -மாங்கரை உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மேலும், இச்சாலை வழியே செல்லும் வாகன ஒட்டிகள் இங்குள்ள குண்டு, குழிகளில் விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

குறிப்பாக, இருசக்கர வாகன ஒட்டிகள் இந்த ராட்சத பள்ளங்களில் விழுந்தெழுந்து காயத்துடனே செல்கின்றனா். எனவே, இச்சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT