கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு

பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து சற்று குறைந்ததால், மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

DIN

பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து சற்று குறைந்ததால், மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் செவ்வாய்க்கிழமை குறைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை காரணமாக பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து, அந்த அணையிலிருந்து கடந்த சனிக்கிழமைமுதல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு 1,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டுவந்த நிலையில், மழையின் தீவிரம் செவ்வாய்க்கிழமை சற்று தணிந்தது. இதனால், உள்வரத்து நீரின் அளவு 628 கனஅடியாக இருந்தது. இதையடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 644 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

இதனிடையே, பேச்சிப்பாறை அணையிலிருந்து 1,000 கனஅடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டுவந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க கடந்த 4 நாள்களாக தடை இருந்துவருகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு தணிந்தநிலையில், திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை புதன்கிழமைமுதல் நீக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT