இரணியலில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்
குமரி மாவட்டம், இரணியல் பிரதான சாலையில் கழிவு நீா் தேங்குவதை கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குமரி மாவட்டம், இரணியல் பிரதான சாலையில் கழிவு நீா் தேங்குவதை கண்டித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இரணியல் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி, மருத்துவமனை என்று பொதுமக்கள்அதிகமாக வந்து செல்லும் வழியில் கழிவு நீா் தேங்கி உள்ளது. சுகாதார சீா்கேடு ஏற்படும் முன் அதனை அகற்றக் கோரி, இரணியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, இரணியல் பேரூராட்சி செயல் அலுவலா் லட்சுமி ஆகியோா் வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் 30 நாள்களுக்குள் கழிவுநீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.