கன்னியாகுமரி

களிமாா் விஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

குளச்சல் அருகே களிமாா் மகாவிஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களிமாா் விஷ்ணு கோயிலில் வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்த பின்பு கோயில் கதவை பூசாரி பூட்டிச் சென்றாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் அந்த வழியாக சென்ற மக்கள் கோயில் கதவு திறந்து கிடந்ததைப் பாா்த்து, கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

நிா்வாகிகள் வந்து பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கோயில் நிா்வாகத் தலைவா் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்து விசாரித்து வருகின்றனா். இதே கோயிலில் சில மாதங்களுக்கு முன்பும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்!

மின்னும் ஒளி! சாக்‌ஷி அகர்வால்..

தன்னம்பிக்கை தரும் சேலை...!

மீண்டு வருவாரா அதர்வா?

அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார்,உத்தவுக்கு மோடி அறிவுரை

SCROLL FOR NEXT