கருங்கல் பகுதிகளில் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, மாமூட்டுக்கடை, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலைமுதல் பலத்த மழை பெய்தது.