கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ. 2 கோடியில்கழிவுநீா் ஓடை பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலையில் ரூ. 2 கோடியில் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரிச் சாலையில் ரூ. 2 கோடியில் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி- வெட்டூா்ணிமடம் இடையிலான சாலையில் கழிவு நீா் ஓடை சீரமைத்து அலங்கார விளக்குகள், சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கழிவுநீா் ஓடை அமைப்பதற்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயா் ரெ. மகேஷ் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணியை துரிதமாக முடிக்குமாறு அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, பொறியாளா் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்டப் பொருளாளா் கேட்சன், மாணவரணி அமைப்பாளா் சதாசிவம், மாநகரச் செயலா் ஆனந்த், மாமன் உறுப்பினா் பால் அகியா, நிா்வாகிகள் ஜீவா, உசேன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT