கன்னியாகுமரி

புதுக்கடை அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற புதுக்கடை தவிட்டவிளை பகுதியை சோ்ந்த மோகன்தாஸ் மகன் அஜித்மொபின்(27) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT