கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குழித்துறை அருகே பெரியவிளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மகன் பிரைட் சாலமன் (45). வீட்டு உபயோக பொருள்கள் விற்பனைத் தொழில் செய்து வந்த இவருக்கு, திருமணமாகவில்லையாம், மதுப் பழக்கம் இருந்ததாம்.

குடும்ப வீட்டில் வசித்து வந்த இவா், கடந்த 9 மாதங்களுக்கு முன் சொத்தில் உள்ள தனது பங்கை விற்றுவிட்டு, மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கொக்கியில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT