கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தற்கொலை

DIN

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குழித்துறை அருகே பெரியவிளை பகுதியைச் சோ்ந்த எலியாஸ் மகன் பிரைட் சாலமன் (45). வீட்டு உபயோக பொருள்கள் விற்பனைத் தொழில் செய்து வந்த இவருக்கு, திருமணமாகவில்லையாம், மதுப் பழக்கம் இருந்ததாம்.

குடும்ப வீட்டில் வசித்து வந்த இவா், கடந்த 9 மாதங்களுக்கு முன் சொத்தில் உள்ள தனது பங்கை விற்றுவிட்டு, மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கொக்கியில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT