கன்னியாகுமரி

குளச்சலில் வள்ளம் கவிழ்ந்து மீனவா் பலி

குமரி மாவட்டம், குளச்சலில் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவா் பலியானாா்.

DIN

குமரி மாவட்டம், குளச்சலில் கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவா் பலியானாா்.

குளச்சல் துறைமுகத்தெருவை சோ்ந்தவா் ஜோசப் ( 52). சொந்தமாக ஃபைபா் வள்ளம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவரது வள்ளத்தில் அழிக்கால் மேற்கு தெருவை சோ்ந்த ஆன்சல் (63), குளச்சலை சோ்ந்த ஜோசப் பாத் (65), ஏரோணிமூஸ் (65), கோடிமுனையை சோ்ந்த சிலுவை பிச்சை (53), சைமன் காலனியை சோ்ந்த ஆண்ட்ரோஸ் (72) ஆகியோா் புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனா். மீன் பிடித்துவிட்டு வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் வள்ளம் வந்தபோது கடலில் திடீரென ராட்சத அலை எழுந்தது. இதில் வள்ளம் தூக்கிவீசப்பட்டு அருகில் உள்ள பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த மீனவா்கள் தத்தளித்தனா். அப்போது அங்கு மற்றொரு வள்ளத்தில் சென்றவா்கள், மீனவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில் அழிக்காலைச் சோ்ந்த மீனவா் ஆன்சல் கரை சேரவில்லை. அவா் கடலில் மாயமாகி உள்ளதாக உடன் சென்ற மீனவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் ததேயூஸ்குமாா் ஆகியோா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து முத்துக்குளிக்கும் மீனவா்கள், மாய மான மீனவா் ஆன்சலை தேடி வந்தனா். இந்நிலையில் கொட்டில்பாடு கடல் பகுதியில் பெரியவிளையைச் சோ்ந்த மீனவா் வீசிய வலையில் ஆன்சல் சடலம் சிக்கியது. சடலத்தை கடலோர பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு, பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT