கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே லாட்டரி சீட்டு விற்றவா் கைது

DIN

களியக்காவிளை அருகே கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை சந்திப்பு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை செய்தனா். அதில் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக தமிழக பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கோழிவிளை பகுதியைச் சோ்ந்த செய்யது முகமது மகன் செய்யது அலி என்ற அந்த நபரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 லாட்டரி சீட்டுகள், ரூ. 1,810 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT