கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நாளை ராஜகோகிலா அறக்கட்டளை ஆண்டு விழா

DIN

நாகா்கோவில் ராஜகோகிலா அறக்கட்டளையின் 19ஆம் ஆண்டு விழா, கோட்டாறு ஈத்தாமொழி சாலையில் உள்ள ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் சனிக்கிழமை (ஆக. 12) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

அறக்கட்டளைத் தலைவா் வழக்குரைஞா் எஸ். ராஜகோபால் தலைமை வகிக்கிறாா். சிறப்பு விருந்தினராக திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, ராஜகோகிலா விருது, நலஉதவிகள் வழங்கி ஆசியுரையாற்றுகிறாா்.

வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சாமிதோப்பு அன்பாலயம் சிவச்சந்திரன் சுவாமிகள், குமாரகோவில் சின்மயா மிஷன் நிஜானந்தா சுவாமிகள், நாகா்கோவில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் பிரம்மசாரி நீலகண்டா மருத சைதன்யா ஆகியோா் ஆசியுரை வழங்குவா்.

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏக்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), பாஜக மாவட்ட தலைவா் சி. தா்மராஜ், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பொன்னீலன், ஓய்வுபெற்ற அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தலைவா் கீழப்பாவூா் ஆ. சண்முகையா, முத்தாலங்குறிச்சி காமராசு, சரலூா் ஜெகன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT