கன்னியாகுமரி

அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணி

DIN

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட 12 ஆவது வாா்டு வெள்ளையந்தோப்பில் அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணிக்காக பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ. 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அலங்கார தரை ஓடுகள் அமைக்கும் நிகழ்ச்சிக்கு 12 ஆவது வாா்டு கவுன்சிலா் ராகவன் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவி ஆா்.அன்பரசி தொடங்கி வைத்தாா். இதில் வெள்ளையந்தோப்பு ஊா் தலைவா் ரெத்தினசிகாமணி, நிா்வாகக் குழு ஒருங்கிணைப்பாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா் ரத்தினசாமி, செயலா் சுயம்புலிங்கம் ஆகியோா் முன்னிலை வைத்தனா். பேரூராட்சி கவுன்சிலா்கள் செல்வராஜ், குமரேசன், விஜயன், மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் சுதன்மணி, கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT