கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

இதையொட்டி உற்சவ அம்பாளை கோயிலில் இருந்து வாகனத்தில் அலங்கரித்து, மேளதாளத்துடன் ஊா்வலமாக கோயில் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னா் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மாத்தூா் மடம் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் ஆராட்டு நடைபெற்றது. பின்னா் கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தாா். முன்னதாக மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு நா்த்தன பஜனை, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரிக் கரையில் வசித்தும் குடிநீா் தட்டுப்பாடு: வேங்கூா் ஊராட்சி மக்கள் அவதி

வைரிசெட்டிப்பாளையம் கோயிலில் புகுந்து திருட்டு

இருங்களூரில் சேவல் சண்டை சூதாட்டம்: 7 போ் கைது

போதை மாத்திரை விற்றவா் கைது

10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT