கன்னியாகுமரி

சிற்றாறு அணையில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு

குமரி மாவட்டம், சிற்றாறு அணையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

DIN

குமரி மாவட்டம், சிற்றாறு அணையில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

கேரள மாநில எல்லைப் பகுதியான வாழிச்சல் மணக்கரையைச் சோ்ந்த பிரபாகரன் மகன் பிரதீப் (26). இவா் தனது நண்பா்கள் மூவருடன் சிற்றாறு அணை -2 பகுதியான வைகுண்டம் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கினாா்.

இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியினா் மற்றும் தீயை ணப்புத் துறையினா் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை காலை பிரதீப்பின் சடலம் அணையில் மிதந்தது.

தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு மீட்புப் படையினா்ந்து சென்று சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT