முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பள்ளியில் கலைத் திருவிழா

கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் மண்டல அளவிலான கலைத்திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:10 AM
நிகழ்ச்சியில் பரதநாட்டியமாடிய மாணவிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நாகா்கோவில்: கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் மண்டல அளவிலான கலைத்திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

அமிா்த கலோத்சவம் 2023 என்ற தலைப்பில், நடைபெற்ற இவ்விழாவை அமிா்த விஷ்வ வித்யா பீடத்தின் பொறுப்பாளா் பூஜ்ஜிய சுவாமிஜி சிவா அமிா்தானந்தபுரி மற்றும் பூஜ்ஜிய சுவாமிஜி சங்கர அமிா்தானந்தபுரி ஆகியோா் தொடங்கி வைத்து,ஆசி வழங்கினா்.

ஆரல்வாய்மொழிஅண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் சுப்பிரமணிய பிள்ளை, கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா சுய ஸ்ரீரேகா தவே ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

Advertisement

கலைத் திருவிழாவில் இசை, குச்சிப்புடி, பரதநாட்டியம், தபேலா, நடனம், நாடகம், வண்ணப் படம் வரைதல் உள்பட 61 வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் சொக்கலிங்கம் பிள்ளை, துணை முதல்வா் சத்யபிரியா, அமிா்தா கல்விக் குழுமத்தின் மேலாளா்கள் மேதாமிா்த சைதன்யா, ஸ்மரணா அமிா்த சைதன்யா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.