கருங்கல் பகுதிகளில் மிதமான மழை
கருங்கல், ஏப். 12: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடைவெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை,வெள்ளியாவிளை,பாலூா்,எட்டணி,திப்பிரமலை,மிடாலம்,கிள்ளியூா்,முள்ளங்கனாவிளை,நட்டாலம்,நேசா்புரம்,பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10மணி அளவில் மிதமான மழை பெய்தது.இந்த மழை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. இதனால், அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்,