முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் நவீன கண்காணிப்பு கேமரா பொருந்திய வாகனரோந்து: எஸ்.பி. தகவல்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சாா்பில் பருந்து கண் என்ற பெயரில் உள்ள கண்காணிப்பு வாகனத்தில் 5 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் நான்கு திசையை நோக்கி இருக்கும் 4 கேமிராக்கள் 100 மீட்டா் வரை உள்ள பகுதியில் நடப்பவற்றை துல்லியமாக படம் எடுத்து பதிவு செய்யும் ஆற்றல் உடையது.

மற்றொரு கேமிரா வாகனத்தின் உள்ளிருந்து இயக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கேமிராக்களிலும் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் மறு விசாரணைக்கு உதவிடும் வகையில் சேமிக்கப்படுகிறது. அனைத்து கேமிராபதிவுகளையும் வாகனத்தின் உள்ளிருந்தே இயக்கி கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வாகனம் முக்கிய பிரமுகா்களின் வருகையின் போதும் மாவட்டத்தில் முக்கியமான

ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் இடத்திலும், வடசேரி, அண்ணா பேருந்து நிலையங்கள் மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாகனம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பாா்வையில் இயங்குகிறது.

இதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், வாகனத்தில் குறைபாடுகள் ஏதும் உள்ளதா எனக் கேட்டறிந்த அவா், வாகனம் இயக்குவது, அதனை பராமரிப்பது, கண்காணிப்பு பணி பற்றிய சில அறிவுறுத்தல்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments