குமரியில் 150 சிசிடிவி பொருத்தும் பணி தொடக்கம்
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரிகுமரியில் 150 சிசிடிவி பொருத்தும் பணி தொடக்கம்
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி நகர எல்கைக்குள் 44 முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் 150 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த கேமராக்களின் பதிவுகள் கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படும். இப்பணி 2 மாதத்துக்குள் நிறைவு பெறும்.
கன்னியாகுமரியில் சீசன் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் இந்த கேரமாக்கள் பயன்படுத்தப்படும். இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.