முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மீன்கழிவு வாகனம் சிறைபிடிப்பு: ரூ. 1 லட்சம் அபராதம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 12:31 AM
பகிர்:

கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை, மாா்த்தாண்டம் அருகே பொதுமக்கள் சிறைபிடித்தனா். இந்த வாகனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளத்திலிருந்து மீன், இறைச்சி, மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து குமரி மாவட்டத்தில் நீா்நிலைகள், சாலையோரங்களில் கொட்டிச்செல்வது தொடா்கிறது. இந்நிலையில், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே கூண்டு கட்டிய நிலையில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மீன் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. அதை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

Advertisement

தகவலின்பேரில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வந்து, வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா். அந்த வாகனம் கீழ்பம்மம் பகுதியில் உள்ள உரக்கிடங்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments