பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது பற்றி...
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசனின் லீக் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 162 ரன்கள் எடுத்தது. அடுத்து, 163 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களை இழந்து 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தாமதமாக பந்துவீசியதற்காக ஐபிஎல் நடத்தை விதியின் பிரிவு 2.22-இன் கீழ், இந்த சீசனில் முதல்முறையாக விதிமீறலில் ஈடுபட்டதற்காக அணியின் கேப்டன் ஷ்ரேயாஸுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து தாமதமாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தாமதமாக பந்துவீசியதற்காக ரூ. 12 லட்சம், ரூ. 24 லட்சம் என இருமுறை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.