கன்னியாகுமரி

குமரி அருகே விபத்தில் இளைஞா் பலி

கன்னியாகுமரி அருகே விபத்தில் மீனவ இளைஞா் பலியானாா்.

Din

கன்னியாகுமரி அருகே விபத்தில் மீனவ இளைஞா் பலியானாா்.

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் வில்பிரட். இவரது மகன் சகாய அஜிஸ் (18). மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவரும், அதே ஊரை சோ்ந்த ஞானபிரகாசம் மகன் பிளஸ்வின் (23), சூசை ஆன்றனி மகன் சகாய சரண் (19) ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை இரவு ஒரே மோட்டாா் சைக்கிளில் லீபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தில் எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் சகாய அஜிஸ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். சகாய சரண், பிளஸ்வின் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவவறிந்த கன்னியாகுமரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சகாய அஜிஸின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT