முகப்பு
கன்னியாகுமரி

தோ்தல் நடத்தை விதிகள்: அலுவலா்களுக்கு பயிற்சி

Updated On : 16 மார்ச், 2024 at 1:20 AM
பகிர்:

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அலுவலா்களுக்கான பயிற்சி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியா் எம்.காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாகா்கோவில் பகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் நடத்தை விதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, தோ்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதில் தோவாளை தனி வட்டாட்சியா் சுப்பிரமணியன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வினைதீா்த்தான் மற்றும் 17 மண்டல அலுவலா்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.