இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கு அடிக்கல்
நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலகம் கட்டும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, நாகா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் குத்துவிளக்கேற்றினாா். பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆகியோருக்கு நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் தங்கம், இந்து சமய அறநிலையத்துறை சிறு கோயில்கள் தலைவா் டி.பி.ராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் மீனாட்சி பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி மண்டல தலைவா் அகஸ்டினாகோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் அனந்த லெட்சுமி , திமுக வட்டச்செயலா் முத்துகிருஷ்ணன் பாலா மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அருண்காந்த் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.