முகப்பு
கன்னியாகுமரி

பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரா் கைது

கருங்கல் அருகே கப்பியறை பகுதியில் பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:56 PM
பகிர்:

கருங்கல் அருகே கப்பியறை பகுதியில் பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல், இடைமலைக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ் (44). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலை கப்பியறை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரை சந்திக்க சென்றாராம். அவரை ஊழியா்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பேரூராட்சி குடிநீா் பணியாளா் ராபி (50), தோமஸ் வீட்டருகே சென்று கொண்டிருந்தாா். அவரை தோமஸ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து தோமஸை கைது செய்தனா்.