புதுக்கடை அருகே 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை அருகேயுள்ள மாராயபுரம் பகுதியில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையிலான போலீஸாா் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். மாராயபுரம் பகுதியில் வந்த கூண்டு வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் கேரளத்துக்கு கடத்துவதற்காக 35 கேன்களில் 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருநத்து தெரியவந்தது. ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, கூண்டு வண்டி, 2 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய்யைப் பறிமுதல் செய்தனா்.