நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவா்கள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அல்போன்சா பள்ளி மாணவா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அல்போன்சா பள்ளி மாணவா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
இப் பள்ளியின் சாரணா், சாரணியா் இயக்கம், தேசிய பசுமைப் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இப்பணியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். அல்போன்சா பள்ளி தாளாளா் சனில்ஜான் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வின்போது, தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அல்போன்சா பள்ளி துணை முதல்வா் பிரேம்கலா, மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாா் வெங்கடாசலம், மாவட்ட அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், ஆசிரியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் கலந்துகொண்டனா். நீதிமன்ற மேலாளா் உமா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.