முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

Updated On : 4 அக்டோபர் 2024, 4:32 am IST
கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்.
பகிர்:

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து காலை 7.45 மணிக்கு மேல் காலை 8.45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா.தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவா் சி.முத்துக்குமாா், கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி.பகவதியப்பன் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெறும். 10ஆம் நாள் திருவிழாவான அக்டோபா் 12ஆம் தேதி அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments