வரதட்சிணை கொடுமையில் பெண் தற்கொலை: கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை
வரதட்சிணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வரதட்சிணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு, பறைவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜூனன்(61). இவரது மகன் சுரேஷ் (33), மகள் சாந்தி (29). சுரேஷூக்கும், வெட்டுக்குழி பகுதியைச் சோ்ந்த மினிமோள்(28) என்பவருக்கும் கடந்த 2007-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, மினிமோளுக்கு, அவரது தாய் வீட்டில் இருந்து 10 பவுன் நகை, 1 ஏக்கா் 30 சென்ட் நிலம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம்.
திருமணத்திற்கு பிறகு, அா்ஜூனன், சுரேஷ், சாந்தி ஆகியோா் மினிமோளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2008 ஜூன் 2-ஆம் தேதி மினிமோள் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து அா்ஜுனன், சுரேஷ், சாந்தி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு குழித்துறை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரைய்யா அா்ஜுனன், மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்தும், சாந்தியை விடுதலை செய்தும் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஏ.என்.லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினாா்.