முகப்பு
கன்னியாகுமரி

குந்நம்விளாகம் கோயிலில் பிரதோஷ வழிபாடு

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:56 PM
பகிர்:

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2-ஆவது ஆலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயில், குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், விளவங்கோடு திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், பாறசாலை மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.