முகப்பு
கன்னியாகுமரி

குளச்சலில் கடல் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதம்

குளச்சல் பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதமடைந்தன.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:06 PM
முட்டம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகுகள்.
பகிர்:

குளச்சல் பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதமடைந்தன.

குளச்சல் கடல் பகுதியில் அலைகள் அதிக உயரத்தில் எழுந்ததால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 300 விசைப்படகுகள், 2,500 நாட்டுப்படகுகள் பாதுகாப்பு கருதி, முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தில் சிக்கி ஒரு விசைப்படகும், இரு நாட்டுப் படகுகளும் சேதமடைந்ததாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.