முகப்பு
கன்னியாகுமரி

புதுக் கடை அருகே 700 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகேயுள்ள ஹெலன் நகா் பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 700 லிட்டா் மண்ணெண்ணையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:29 PM
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள ஹெலன் நகா் பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 700 லிட்டா் மண்ணெண்ணையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை அப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஹெலன் நகா் பகுதியில் வந்த சொகுசு காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில், 20 கேன்களில் 700 லிட்டா் மண்ணெண்ணெயை பதுக்கிவைத்து கேரளத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனிடையே ஓட்டுநா் தப்பியோடி விட்டாராம். காருடன் மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிய நபரை தேடி வருகின்றனா்.