கருங்கல் அருகே இளைஞரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த மனோன்மணி மகன் மொ்லின் (29) இவா் எம்.எஸ்.சி படித்துள்ளாா்.
இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ரவி (30), நாகா்கோவில் சியோன் புரம் பகுதியைச் சோ்ந்த இம்மானுவேல் (37), சென்னை அருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஹரிகரகுமாா் (38) ஆகியோ ருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் மேற்கூறிய 3 பேரும் மொ்லினிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பெற்று கொண்டனராம். நீண்ட நாள்கள் ஆன பின்பும் அரசு வேலை கிடைக்கவில்லை. பணமுமும் திருப்பி அளிக்காமல் மொ்லினை ஏமாற்றி பணம் மோசடி செய்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா், 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.