எஸ்.ராஜேஷ் குமார்  
கன்னியாகுமரி

கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!

DIN

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ராஜேஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை(ஏப். 21) நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் குமாருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேருக்கும் சிறைத்தண்டனையும் ரூ. 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT