கன்னியாகுமரி

கருங்கல்லில் பேருந்தில் குழந்தையின் நகை திருட்டு: பெண் கைது

கருங்கல்லில் பேருந்தில் குழந்தையின் நகை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கருங்கல்லில் பேருந்தில் குழந்தையின் நகை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் கரோலின் ஆஷ்மி (30). இவா் தன் கைக்குழந்தையுடன் நாகா்கோவில் - மேல்மிடாலம் அரசுப் பேருந்தில் கருங்கல்லுக்கு வியாழக்கிழமை இரவு வந்தாராம். கருங்கல் பேருந்து நிலையம் வந்தவுடன் கைக்குழந்தை அணிந்திருந்த 6 கிராம் பிரெஸ்லெட்டை காணாததை அறிந்து கூச்சலிட்டாா். உடனே, சக பயணிகள் அருகில் நின்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து கருங்கல் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரித்ததில், அவா் மதுரையை சோ்ந்த சாந்தி(55) என்பதும், குழந்தையின் நகையைத் திருடியதும் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து நகையை மீட்டனா்.

இந்திய அணியின் பேட்டிங்கில் தெளிவு இல்லை: ராபின் உத்தப்பா

பொள்ளாச்சி: கந்துவட்டி கேட்டு இளம் பெண்ணை மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது

அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா..! ஏகே 64 ஒத்திகையா?

நாட்டுப் பிரச்னைகளை திருப்பரங்குன்றம் விவகாரத்தால் மூடி மறைக்கும் மத்திய, மாநில அரசுகள்: சீமான்

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக மேலாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் பயிற்சி: எப்படி விண்ணப்பிப்பது?

SCROLL FOR NEXT