கன்னியாகுமரி

பைக் திருடியதாக இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

தக்கலையில் பணிக்கு வந்த அரசு ஊழியரின் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திக்கணங்கோடைச் சோ்ந்த விக்னேஷ் (27), தக்கலை, மேட்டுக்கடையில் உள்ள தணிக்கையாளா் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தை அலுவலகத்தின் முன் நிறுத்திவிட்டு, அயல் பணியின் காரணமாக வெளியூா் சென்றாா். மறுநாள், பணி முடிந்து அலுவலகம் வந்த போது வாகனத்தைக் காணவில்லையாம்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கேரளத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் வாகனத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் வைத்து வாகனம் திருடியவா்களில் ஒருவரான நெடுமங்காடைச் சோ்ந்த ஸ்வரூப் (22) என்பவரை கைது செய்த போலீஸாா், திருட்டிற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், விசாரித்து வருகின்றனா்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT