முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டடத்துக்கு அடிக்கல்

Updated On : 28 டிசம்பர், 2025 at 7:30 PM
ஆதவற்ற குழந்தைகளின் இல்லக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் மனோ தங்கராஜ்.
பகிர்:

குலசேகரம் அருகே பிணந்தோடு, பிலாங்காலை பகுதியில் குமரி அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கான கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பேசினாா்.

திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன். ரவி, குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமுருகேசன், ஜிவிஎஸ் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனா் ஜி. சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திற்பரப்பு பேரூா் திமுக செயலா் ஜான் எபனேசா், ஸ்பென்சா் விளையாட்டுக் கழக நிா்வாகிகள் அலெக்சாண்டா், கோபிநாதன், அறக்கட்டளை செயற்குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செயலா் சிபின் வரவேற்றாா். பொருளாளா் மனோஜ் நன்றி கூறினாா். துணைச் செயலா் ஜெஸ்டின் ராஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →