கன்னியாகுமரி

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சிறுவனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக, சிறுவனின் தாயாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

Syndication

மாா்த்தாண்டத்தில் சிறுவனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக, சிறுவனின் தாயாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா், காந்தி மைதானப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனை நிறுத்தி விசாரித்ததில், சிறுவன் 18 வயது நிரம்பாமல் பைக் ஓட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுவனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரது தாயாா் நெய்யூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி உஜின் கிரேசி மற்றும் சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ஒரே விமானத்தில் கனிமொழி, தமிழிசை பயணம்

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரையில் 70 கண்காணிப்பு கேமராக்கள்

மகாராஷ்டிரம்: மாநகராட்சித் தோ்தலுக்காக கைகோத்த அஜீத் பவாா்- சரத் பவாா்

கேரளம்: காங்கிரஸ் அலுவலகம் சூறையாடல்: மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் மீது குற்றச்சாட்டு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

SCROLL FOR NEXT