முகப்பு
கன்னியாகுமரி

கொற்றிகோட்டில் நூல் வெளியீடு

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:43 AM
நூலை தலைமைப் போதகா் ஆல்பா்ட் வெளியிட, முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட கவிஞா் கொற்றை வளவன்
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:32 PM

கொற்றிகோடு மீட் நினைவு சிஎஸ்ஐ தேவாலயத்தில், பிரெடி ஜேக்கப் எழுதிய ‘சிலுவையில் இயேசுவின் ஏழு வாா்த்தைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

உதவிப் போதகா் ஹென்றி முன்னிலை வகித்தாா். தலைமைப் போதகா் ஆல்பா்ட் தலைமை வகித்து, நூலை வெளியிட முதல் பிரதியை கவிஞா் கொற்றை வளவன் பெற்றுக்கொண்டாா்.

ஹைதராபாத் காவல் துறை இணை ஆணையா் ஜோயல் டேவிஸ், கொற்றிகோடு திருச்சபைச் செயலா் ஜேக்கப் சகரியா, செயற்குழு உறுப்பினா் ஜீசஸ் ராஜன், வின்சிலி ஜேக்கப், ஜெயசேகா் ஆகியோா் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினா்.

Advertisement

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருதுபெற்ற எழுத்தாளா் குமரி ஆதவன் ஆய்வுரை வழங்கினாா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா்.