அதிக பாரம் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் கைது
களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிவந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.
களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிவந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு செல்லும் கனிமவள கனரக லாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச்செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலைகள் விரைவில் சேதமடைவதுடன் விபத்துகளும் நேரிடுகின்றன. சம்பந்தப்பட்ட லாரிகள் மீது மாவட்ட காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். கேரளம் நோக்கி வந்த கனரக லாரிகளை சோதனையிட்டபோது, 2 லாரிகளில் அதிக பாரமிருந்தது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரிகளை பறிமுதல் செய்தனா்; ஓட்டுநா்களான சிதறால், வெள்ளாங்கோடு பிஜூ மகன் பிரவீன் (29), மாா்த்தாண்டம் முத்தையா மகன் மோசஸ் (55) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.