கன்னியாகுமரி: கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
பள்ளிக்கு மாணவா்கள் விடுப்பு எடுக்காமல் ஒழுங்காக வர வேண்டும் என்றும், கல்வியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை லட்சியமாகக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.