கன்னியாகுமரி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவானவா் தெலங்கானாவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம், நகை மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம், நகை மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் குருசடி பகுதியை சோ்ந்தவா் எலிசபெத். இவரிடம், அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்த பத்மா, அவரது கணவா் ராமநாத பிள்ளை(56) ஆகியோா் தங்களிடம் பணம் செலுத்தினால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறினராம். அதை நம்பிய எலிசபெத், அவா்களிடம் பணம் கொடுத்ததாராம். பின்பு அந்தப் பணத்தை திருப்பித் தராமல் இருவரும் தலைமறைவாகிவிட்டனராம்.

இதுதொடா்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் எலிசபெத் புகாா் அளித்திருந்தாா்.

விசாரணையில், அந்தத் தம்பதி எலிசபெத் உள்பட 15 பேரிடம் சுமாா் ரூ.32 லட்சம், 66 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

அவா்கள் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நாகா்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், அத்தம்பதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனா்.

அவா்கள் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால், அதை நிறைவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான போலீஸாா், தீவிர தேடுதல் நடத்தி தெலங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த ராமநாத பிள்ளையை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

அமைச்சா் இ. பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

எஸ்ஐஆா் பணியால் மன அழுத்தம்: குஜராத்தில் வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்

SCROLL FOR NEXT