முகப்பு
கன்னியாகுமரி

வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 8:26 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

பாலூா், கோட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகள் லட்சுமி(16). இவா் வெள்ளியாவிளையில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வகுப்பறையில் இருந்த மாணவி மயங்கி விழுந்தாராம். மாணவியை கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மாணவி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →